Saturday, September 6, 2014

அப்பா

அப்பா
என் கைபிடித்து
நடக்க கற்றுக்கொடுத்தார்
நான் அப்பாவின் கைபிடித்து
எஸ்கலேடோர்  ஏற கற்றுக்கொடுத்தேன்
வாழ்க்கை ஒரு வட்டம் தான்!

சாமியார்கள்

உண்மையில்
சாமியார்கள்தான்
நிஜ நாத்திகர்கள்.
என்ன செஞ்சாலும்
கடவுளால் தண்டிக்க
முடியாதுன்னு தெரிஞ்சே
எல்லா
அயோக்கியத்தனமும் பண்றாங்க

Friday, January 14, 2011

பொங்கலோ பொங்கல்

உழைத்த மனிதனுக்கும்
களைத்த மாடுகளுக்கும்
உதிக்கும் கதிரவனுக்கும்
நன்றிகள் பல சொல்லி
அரிசி உலையிலிட்டு
கொதித்த பாலிலே
உரித்தாக்கும் பொங்கல்!

மாடுகளுக்கு எப்போ?

Thursday, October 14, 2010

நிலா மனிதன் கஷ்டம்

நிலா நிலா ஓடி வா
பழைய பட்டு

நில்லாமல் ஓடு
புது பாட்டு

சிறிலங்காவில் கஷ்டம்
மனிதனுக்கு திமிர்

காப்பாற்றிடு கடவுளே
எம்மதமும் ஒக்கே.

Wednesday, July 1, 2009

கவிதை சூழல்

மேத்தா சொன்னாராம்
புதுக்கவிதை வானம்பாடி
நான் சொல்கிறேன்
வெறும் பேச்சு தான்!

உரை நடை
உங்கள் விருப்பம்
இந்த உலகின்
கவிதை சூழல்